செய்திகள்

13‌-ஐ மண‌ந்த 42 ... இ‌ப்படியு‌ம் ஒரு ‌கொடுமை

வச‌தி‌க்காகவு‌ம், சுயநல‌‌த்து‌க்காகவு‌‌ம் பெ‌ற்றோ‌ர்களே த‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை மு‌தியவ‌ர்களு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்கு‌ம் கொடுமை வட மா‌நில‌ங்க‌ளி‌ல்தா‌ன் அர‌ங்கே‌றி வ‌ந்தது. த‌ற்போது த‌‌மிழக‌த்‌திலு‌ம் இ‌ந்த கலா‌ச்சார‌ம் வர‌த் தொட‌ங்‌‌கி‌வி‌ட்டது.

அதை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்... 

வேலூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் ரா‌‌ணி‌ப்பே‌ட்டை அருகே உ‌ள்ளது க‌ன்‌னியாபுர‌ம் எ‌ன்ற ‌கிரா‌ம‌ம். இ‌ந்த ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர் உமா (பெய‌ர் ம‌ா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது) வயது 13.

த‌ா‌ய், த‌ந்தையை இழ‌ந்த உமா, உற‌வின‌ர் ஒருவ‌ரி‌ன் வள‌ர்‌ப்‌பி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌கிறா‌ர். ‌‌சிறு வய‌திலேயே பெ‌ற்றோரை இழ‌ந்த உமாவு‌க்கு உற‌வினரே பெ‌ற்றோராக இரு‌ந்து வ‌ரு‌கி‌ன்றன‌ர்.

ரா‌ணி‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளி‌யி‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பு படி‌த்து வ‌ந்த உமாவு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்ய முடிவு செ‌ய்தன‌‌ர் வள‌ர்‌ப்பு பெ‌ற்றோ‌ர். பெ‌ங்களூரை சே‌ர்‌ந்த 42 வயது மு‌தியவரை ‌மணமகனாக தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளன‌ர்.

‌‌திருமண‌ம் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவதாக ந‌ம்‌‌மிடையே சொ‌ல்வது உ‌ண்டு. ஆனா‌ல் ‌13 வயது சிறு‌மி உமாவு‌க்கு 42 வயது மு‌தியவருட‌ன் ‌திருமண‌‌ம் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது.

படி‌க்க வே‌ண்டிய வய‌‌தி‌ல் உமாவு‌க்கு 42 வயதுடைய மு‌தியவரு‌க்கு உற‌வின‌ர்க‌ள் ‌திருமண‌‌ம் செ‌ய்து வை‌த்து‌வி‌ட்டன‌ர் உற‌வின‌ர்க‌ள். ‌திருமண கோல‌‌த்தோடு ‌கிராம‌த்‌தி‌ற்கு வ‌ந்த உமாவை பா‌ர்‌த்து ஊ‌ர்ம‌க்க‌ள் அ‌தி‌‌ர்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

க‌ட்டாய‌த்‌தி‌ன் பே‌ரி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ப்ப‌ட்ட உமாவை ‌மீ‌ட்ட ‌கிராம ம‌க்க‌ள் காவ‌ல்துறை‌யி‌ல் ஒ‌‌ப்படை‌த்தன‌ர். ‌சிறு‌மி‌க்கு க‌ட்டாய ‌திருமண‌ம் செ‌ய்து வை‌த்த உற‌வின‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

அ‌‌றியாத வயசு, பு‌ரியாத மனசு எ‌‌ன்ற ‌நிலைதா‌ன் உமாவு‌க்கு. து‌ல்‌லி‌த் ‌தி‌ரிய வே‌ண்டிய வய‌தி‌ல் ‌திருமண‌‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நிக‌‌ழ்வு த‌‌மி‌ழ்நாடு ம‌ட்டும‌ல்ல இ‌ந்‌தியா முழுவது‌ம் இதே ‌நிலைதா‌ன் ‌நீடி‌த்து வரு‌கிறது.

ஒரு ப‌‌க்க‌ம் வறுகை, மறுப‌க்க‌ம் வச‌தி‌. இ‌‌ப்படி‌ப்ப‌ட்ட‌‌ ‌நிலை‌யி‌‌ல்தா‌ன் குழ‌ந்தை ‌திருமண‌ம் நட‌க்‌கிறது. பெ‌ரிய பண முதலைக‌ள் த‌ங்க‌ள் தோஷ‌த்து‌க்காக ‌சிறு‌மியை ‌திருமண‌ம் செ‌ய்தா‌ல் உ‌ங்க‌ள் தோஷ‌ம் க‌ழி‌ந்து‌விடு‌ம் எ‌ன்று ஜோ‌திட‌ர்க‌ள் கூ‌றியவதை வ‌ை‌த்து‌க் கொ‌ண்டு வறுமை, வச‌‌தி‌ வே‌ண்டி இரு‌ப்ப‌வர்களை பண ஆசையை கா‌ட்டி த‌ங்க‌ள் வ‌ழி‌க்கு கொ‌‌ண்டு வ‌‌ந்து ‌சிறு‌மியை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

பெ‌ண்‌ணி‌ன் ‌திருமண வயது 21. இதுதா‌ன் அர‌சி‌ன் ச‌ட்ட‌‌ம். ஆனா‌ல் இ‌ந்த ச‌ட்ட‌ம் த‌ற்போது கா‌ற்‌றி‌ல் பற‌க்‌கிறது.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...