செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கு : இன்று 2வது நாளாக விசாரணை


இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கேஎஸ் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் மோகன் பராசுரனும், பூவுலகின் நண்பர்கள் சார்பில் சாந்தி பூஷனும் ஆஜராகி வாதாடினர்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகள் குறித்தும் தகவல் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...