சவாலை எதிர்கொள்வாரா பிரதமர்? |
குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிரசாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவால் விடுத்துள்ளார்.
பிரசாரத்தின் போது மோடி பேசுகையில், "நீங்களும் (மன்மோகன் சிங்) சாலை அமைத்துள்ளீர்கள். நானும் சாலைகள் அமைத்துள்ளேன். நீங்களும் கால்வாய் அமைத்துள்ளீர்கள். நானும் அமைத்துள்ளேன். மருத்துவமனைகளை நீங்களும் கட்டியுள்ளீர்கள். நானும் கட்டியுள்ளேன். குஜராத்துக்கு வாருங்கள். யாருடைய பணி மக்களுக்கு பிடித்துள்ளது என்பதை பார்ப்போம். யார் சிறந்த சேவை செய்திருக்கிறோம் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். குஜராத் மக்களை ஏமாற்ற முடியாது" என்றார். இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
Post a Comment