செய்திகள்

பாரதீய ஜனதா ஆட்சியில் கறுப்பு பணத்தை மீட்காதது ஏன்? சோனியா


பாரதீய ஜனதா ஆட்சியில் கறுப்பு பணத்தை மீட்காதது ஏன்? சோனியா
பனாஜி
 
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க இப்போது குரல் கொடுக்கும் பாரதீய ஜனதாவினர், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன், என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
6 வருட பாரதீய ஜனதா ஆட்சியில் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி கறுப்பு பணத்தை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார் எனவும் சோனியா கேட்டுள்ளார்.
 
மேலும் லோக்சபாவில் நிறைவேறிய லோக்பால் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் பாரதீய ஜனதாவினர் திட்டம் போட்டு தடுத்துவிட்டதாகவும் சோனியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...