செய்திகள்

பாகிஸ்தான் மறுவாக்குப்பதிவு: இம்ரான் கான் கட்சி வெற்றி





பாகிஸ்தானில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகாரையடுத்து கராச்சி பாராளுமன்றத் தொகுதி எண் 250-ல் உள்ள 43 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவமா சாரா சாகித் உசைன் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. 

இதனால் மறுவாக்குப்பதிவின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஒட்டுமொத்த தொகுதிக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று முத்தாகிதா குவாமி இயக்கம் வலியுறுத்தியது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எனவே, நேற்று நடந்த மறுவாக்குப்பதிவை முத்தாகிதா குவாமி இயக்கம் புறக்கணித்தது. அங்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

அக்கட்சியின் வேட்பாளர் ஆரிப் ஆல்வி 17 ஆயிரத்து 489 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத்-இ-இஸ்லாமி வேட்பாளர் நய்மத்துல்லா கான் 446 வாக்குகளும் பெற்றனர். கராச்சியில் வெற்றி பெற்றது அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று ஆரிப் ஆல்வி தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...